திண்டுக்கல் மாவட்டம் பழனி டவுன் கொஸ்டின் கோவில் சிந்து பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி ஜெயா. இவருக்கு 64 வயது ஆகிறது. இவர்களது மகன் வினோத் பிரபு. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் சுப்ரமணியன் உயிரிழந்தார்.

இதனால் வினோத் பிரபு தனது தாயுடன் வசித்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வினோத் பிரபுவின் வீடு பூட்டியே கிடந்ததால் அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ள சென்று பார்த்த போது படுக்கை அறையில் ஜெயாவும், வாயில் நுரை தள்ளியபடி வினோத் பிரபுவும் உயிரிழந்த கடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

அவர்களது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் திருமணத்திற்கு பெண் கிடைக்காததால் தாயும் மகனும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.