
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை பகுதியில் சுமன்(21) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஸ்ரீலேகா(20) என்ற பெண்ணை காதலித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் செய்தார். ஸ்ரீலேகாவின் உறவினர்களான திமுக கவுன்சிலர் சாந்தி, அவரது கணவர் சதீஷ்குமார் ஆகியோர் தொடர்ந்து காதல் தம்பதிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும் சுமன் வீட்டிற்கு தண்ணீர் விநியோகம் செய்யாமல் துன்புறுத்தி வந்தனர்.
நேற்று சாந்தியும், அவரது கணவர் சதீஷ்குமாரும் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் அச்சத்தில் காதல் தம்பதியினர் தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கொலை மிரட்டல் விடுக்கும் உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பொள்ளாச்சி சப் கலெக்டர் அலுவலகத்தில் தஞ்சமடைந்து மனு அளித்தனர். இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.