
சட்டப்பேரவையில் அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியதாவது, ஆட்சிக்கு வந்த பிறகு ரூ.1,122 கோடியில் 3000 பள்ளி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது. ரூ.4000 கோடியில் 10,545 கிலோ மீட்டர் தூரம் சாலைகள் போடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்னும் எட்டு கிராமங்கள் தான் இணைக்கப்படாமல் உள்ளது என கூறியுள்ளார்.
மேலும் கலைஞர் கனவு இல்லம் திட்டத்திற்காக ரூ. 3,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 25,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. ரூ. 2,418 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மார்ச் மாதத்திற்குள் கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் 2 லட்சம் வீடுகளை கட்டி முடிக்கப்படும் என கூறியுள்ளார்.