கலாஷேத்ராவின் ருக்மணி தேவி நுண்கலை கல்லூரியில் பாலியல் தொல்லை கொடுத்த பேராசியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக, கலாஷேத்ராவில் மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி விசாரணை நடத்தினார். குற்றச்சாட்டுக்கு உள்ளான பேராசிரியரை பணி நீக்கம் செய்யும்படி போராட்டத்தில் மாணவர்கள் வலியுறுத்தினார்கள். இது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் சார்பில் கமிட்டி அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில் சென்னை கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, ஹரிபத்மன் என்ற பேராசிரியர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தனிப்படை அமைத்து, போலீஸார் அவரை தேடி வருகின்றனர்.