இவர் விக்ரம் படத்தில் இடம்பெற்ற போர் கண்ட சிங்கம் என்ற பாடலை எழுதியவர். மேலும் நாயகன் மீண்டும் வரான், பொளக்கட்டும் பர பர என முன்னணி நட்சத்திரங்களின் பாடல்களை இவர்தான் எழுதியிருந்தார். அதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் பாடல் எழுதி வளரும் இளம் பாடலாசிரியராக இவர் இருந்து வருகிறார். சமீபத்தில் டாடா திரைப்படத்தில் கூட பாடல் எழுதி இருந்தார்m மேலும் இவர் கத்தி, மாஸ்டர் திரைப்படங்களில் இணை இயக்குனராகவும் பணிபுரிந்துள்ளார்.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜூவிடம் துணை இயக்குநராக இருந்தவரும், பிரபல பாடலாசிரியருமான விஷ்ணு இடவன் மீது இளம்பெண் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார். தன்னை காதலித்து கர்ப்பமாக்கி திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாக இளம்பெண் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.