பழைய வண்ணாரப்பேட்டை திரைப்படத்தின் வாயிலாக தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. இதையடுத்து இவர் இயக்கிய திரெளபதி, ருத்ரதாண்டவம் போன்ற படங்கள் வரவேற்பை பெற்று சில சர்ச்சைகளையும் கிளப்பியது. இந்த படங்களை அடுத்து இவர் இயக்கியுள்ள “பகாசூரன்” படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி போன்றோர் முக்கியமான கதாப்பாத்திரத்திலும் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் வரும் பிப்ரவரி 17ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் மோகன் ஜி அவ்வப்போது சர்ச்சையில் சிக்கிக்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த அடிப்படையில் அண்மையில் பெண்கள் குறித்து இவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது “பெண்கள் தங்களுடைய சமூகவலைதளத்தில் Profile புகைப்படங்களை அழகாக வைக்கவேண்டாம். அப்படி வைப்பது தான் சில பிரச்சனைகளுக்கு முக்கியமான காரணமாக அமைகிறது என பேசியுள்ளார். இவர் இப்படி பேசி இருப்பதை கண்டித்து நெட்டிசன்கள் பலரும் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.