கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு 340 ரூபாயாக அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், வரும் அக்டோபர் 1, 2024 முதல் 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 வரையிலான காலத்தில் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கும் வகையில் கரும்புக்கான விலை உயர்த்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். முந்தைய ஆண்டு கரும்புக்கான MSP குவிண்டாலுக்கு 315 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.