தமிழகத்தில் கோவை, நீலகிரி, நெல்லை, தென்காசி மற்றும் தேனி ஆகிய ஐந்து மாவட்டங்களில் மிக கனமழையும், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் ஈரோடு உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட ஐந்து மாவட்டங்களில் நெல்லை, தென்காசி மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் ஏற்கனவே இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கோவை மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மதியத்திற்கு மேல் அரை நாள் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என தெரிகிறது.