தமிழ் சினிமாவில் தேவர் மகன் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்தான் நடிகை நீலிமா ராணி. அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்த இவர் பிறகு சின்னத்திரைக்கு திரும்பினார். அதில் மெட்டி ஒலி மற்றும் கோலங்கள் உள்ளிட்ட பல சீரியல்களில் இவர் நடித்துள்ளார். இதனிடையே 21 வயதில் துணை நடிகராக இருந்த இசைவாணன் என்பவரை இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு சீரியலில் இருந்து விலகி இருக்கும் நீலிமா சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருவது வழக்கம். வாய்ப்பு இல்லாததால் நடிப்பை விட்டு சென்னையில் உள்ள ஆர்கே சாலையில் நேச்சுரல் சிக்னேச்சர் என்ற அழகு நிலையத்தை அவர் தொடங்கியுள்ளார். அந்த அழகு நிலையத்தை பாடகர் எஸ் பி சரன் திறந்து வைத்த நிலையில் பலரும் கலந்து கொண்டனர். அந்த புகைப்படத்தை நீலிமா பகிர்ந்து உள்ள நிலையில் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Neelima Rani இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@neelimaesai)