குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆண் பெண் என அனைவருக்கும்பல்வேறு காப்பீடு திட்டங்கள் எல்ஐசி நிறுவனத்தால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் மிக முக்கியமானது ஒரு திட்டம் தான் lic ஜீவன் சாதி பீமா யோஜனா திட்டம். இந்த திட்டத்தில் நல்ல வருமானம் கிடைக்கும். இதில் சிறப்பம்சம் என்னவென்றால் கணவன் மனைவி இருவருமே இந்த திட்டத்தின் முதலீடு செய்யலாம். இதில் இருவருக்குமே நல்ல வருமானம் கிடைக்கும். இந்த திட்டத்தில் இருவரும் ஒரே பிரிமியத்தில் இருவரும் முதலீட்டு தொகையை பெற முடியும்.

ஒருவர் இல்லாத நிலையில் மற்றொருவர் பிரீமியம் தொகையை செலுத்த வேண்டியது இல்லை. பாலிசி காலாவதியான பிறகு இரண்டு முதிர்வு நன்மைகளையும் பெறலாம். 18 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்கள் இந்த திட்டத்தில் பலன் பெறலாம் .ஒருவர் மரணம் அடைந்தால் எஞ்சியவருக்கு பலன் கிடைக்கும். பாலிசிதாரர் இல்லாத பட்சத்தில் உடனடியாக 5 லட்சம் தொகை கிடைக்கும். மேலும் பிரீமியம் செலுத்த வேண்டியதில்லை. வருடத்திற்கு ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.