டெல்லியில் ஒரு 35 வயது பெண் தனியாக வசித்து வருகிறார். இந்த பெண்ணின் கணவர் இறந்துவிட்டார். இந்தப் பெண்ணின் கணவனின் உறவினர் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறுவன் ஏர் கண்டிஷனர் மற்றும் குளிர்சாதன பெட்டி பழுது பார்க்கும் தொழிலை கற்றுக்கொள்வதற்காக இந்த சிறுவனை அந்த பெண்ணின் வீட்டிற்கு உறவினர்கள் அனுப்பி வைத்துள்ளனர். இந்த சிறுவனுக்கு அந்தப் பெண் அத்தை முறையாவார்.

இந்த சிறுவனுக்கும் அந்த பெண்ணுக்கும் இடையே நாளடைவில் நெருக்கம் ஏற்பட்ட நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த சிறுவன் சொந்த ஊரான மீரட்டுக்கு சென்ற நிலையில் சிறுவனின் நடத்தையில் குடும்பத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அவர்கள் மீண்டும் அத்தை இருக்கும் இடத்திற்கு அனுப்ப வேண்டாம் என்று நினைத்தனர். இதனால் வருத்தம் அடைந்த அந்த பெண் சிறுவனின் வீட்டிற்கு சென்று போலீசார் மற்றும் அவரது குடும்பத்தினர் முன்னிலையில் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டோம் இனி அவர் எனக்கு மருமகன் கிடையாது கணவன் என்று கூறியுள்ளார்.

இதனை கேட்டு அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்த நிலையில் அந்த சிறுவனுக்கு 16 வயது மட்டுமே ஆவதால் அந்த பெண்ணின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் தாங்கள் சகோதரியாக நினைத்துக் கொண்ட ஒரு பெண் இப்படி செய்வார் என்று நினைத்து கூட பார்க்கவில்லை என மிகவும் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் 16 வயது சிறுவனை அந்தப் பெண் திருமணம் செய்து கொண்டது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.