அமைச்சர் எவ. வேலுவிற்கு சொந்தமான இடங்களிலும் அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களிலும் கடந்த நான்கு நாட்களாக வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் கணக்கில் வராத 250 கோடி கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அமைச்சர் எவ.வேலு தொடர்புடைய இடங்களில் 18 கோடிக்கு மேல் கணக்கில் வராத ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

திமுக அமைச்சர்கள் தொடர்ந்து வருமான வரி சோதனையில் அடுத்தடுத்து சிக்கிக் கொள்வது கடந்த சில மாதங்களாக நடந்து வரும் நிலையில் தற்போது அமைச்சர் வேலு வசமாக சிக்கியுள்ளார்.