தெலுங்கானா மாநிலம் மஞ்சூரியாலா மாவட்டம் சுன்னம்பட்டிவாடா பகுதியில் வசிப்பவர் தல்லாபள்ளி பிரசாத் . இந்நிலையில் சம்பவத்தன்று இவரை தெருநாய் ஒன்று கடிக்க முயன்றுள்ளது. அப்பொழுது தன்னுடைய கைகளால் தடுக்க முயன்றுள்ளார். அப்போது நாய் அவருடைய கட்டைவிரலை கடித்துள்ளது .

இதனால் அலறிய பிரசாத்தை பார்த்த அருகில் இருந்தவர்கள் அந்த தெரு நாய் விரட்ட முயன்றிருக்கிறார்கள் . ஆனால் அவர்கள் நான்கு பேரையும் நாய் தாக்கியதில் பலத்த காயமடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து அனைவரும் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.