மியான்மர் நாட்டின் தலைநகரான யாங்கூனில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த கார் மீது மோதியது. இந்த விபத்தில் அடுத்தடுத்து ஐந்து கார்கள் சிக்கியது.

இது குறித்த தகவல் அறிந்த மீட்பு குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கிய கார்களை அப்புறப்படுத்தியதோடு காரில் சிக்கி இருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது.

இந்த சங்கிலித் தொடர் விபத்தில் ஏழு பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வரும் நிலையில் ஒரு பெண் உட்பட 3 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.