ஒடிசா மாநிலத்தில் உள்ள பெர்ஹம்பூர் பகுதியில் கோபால்பூர் கடற்கரை உள்ளது. இங்கு உள்ளூர் பண்டிகை நடைபெறுவதால் அதிக அளவிலான மக்கள் கடற்கரைக்கு வந்து செல்கிறார்கள். இந்தப் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் தங்கி படிக்கும் மாணவி ஒருவர் அதே கல்லூரியில் படிக்கும் தன்னுடைய காதலனுடன் கல்லூரிக்கு சென்றுள்ளார். அங்கு இருவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது திடீரென 10 பேர் கொண்ட ஒரு கும்பல் அங்கு வந்தனர்.

அவர்கள் அந்த மாணவியின் காதலனை பிடித்து வைத்துவிட்டு பின்னர் அந்த பெண்ணை ஒரு ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு தூக்கிச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்ட நிலையில் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவியும் அவரது காதலனும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து 7 பேரை பிடித்து விசாரணை நடத்தி வரும் நிலையில் தப்பியோடிய மீதம் உள்ளவர்களையும் தேடி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.