இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளையும், திட்டங்களையும் செயல்படுத்தி  வருகிறது. இந்நிலையில் கடன் வாங்கிய வாடிக்கையாளர்களை  எஸ்பிஐ வங்கி அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மார்ஜினல் காஸ்ட் ஆஃப் ஃபண்ட்ஸ் லெண்டிங் ரேட் (எம்சிஎல்ஆர்) 5 அடிப்படை புள்ளிகளால் அதிகரிக்கப்பட்டுள்ளது. ]இதன் விளைவாக, ஒரு நாள், ஒரு மாதம், ஆறு மாதங்கள், ஒரு வருடம் மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு எம்சிஎல்ஆர் விகிதம் அதிகரித்துள்ளது. எம்சிஎல்ஆர் உடன் இணைக்கப்பட்ட அனைத்து வகையான கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும் போது, ​​கடன் வாடிக்கையாளர்கள் செலுத்தும் EMIகள் அதிக சுமையாக மாறும். இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது.