
வங்காள தேசத்தில் மாணவர்கள் அமைப்பினர் நடத்திய போராட்டம் கலவரமாக மாறிய நிலையில் பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்த பிறகும் தொடர்ந்து வன்முறை தொடர்கிறது. பிரதமர் ராஜினாமா செய்த பிறகு அதிபர் நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்ட நிலையில் தற்போது இடைக்கால அரசின் புதிய அதிபராக முகமது யூனின் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் போராட்டத்தின்போது ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியினர் குறிவைத்து தாக்கப்பட்டனர். அதாவது அவர்களுடைய வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் சூறையாடியதோடு தீ வைத்து எரித்தனர்.
இந்த கலவரத்தில் தற்போது அந்த கட்சியின் தலைவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் என 29க்கும் மேற்பட்ட உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி முன்னாள் கவுன்சிலர் முகமதுஷா ஆலமீன் வீடு வைத்து எரிக்கப்பட்டதில் 6 பேரின் உடல்களும், சக்திகிரா பகுதியில் நடந்த தாக்குதலில் 10 பேரின் உடல்களும், எம்பி ஷகுபில் இஸ்லாம் ஷமீன் வீட்டிற்கு தீ வைத்ததில் 4 பேரின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதேபோன்று இளைஞர் பிரிவை சேர்ந்த 2 தலைவர்களின் உடல்கள் உட்பட 19 தலைவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.