நடிகர் விஜய் நடிப்பில் மட்டுமல்லாமல் தன்னுடைய இயக்கம்  மூலமாகவும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்காக செய்து வருகிறார். சமீபத்தில் கூட தமிழகத்தில் 12 ஆம் வகுப்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். இதனையடுத்து விஜய்யின் இந்த செயலால் அவர் அரசியலுக்கு வருவதற்காக தான் இப்படியெல்லாம் செய்கிறார் என்று பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து இயக்குநர் அமீர் கருத்து தெரிவித்திருக்கிறார். “வாக்குக்கு பணம் வாங்கக் கூடாதுனு சொல்றது போல புதுப்படத்தின் முதல்நாள் காட்சிக்கும் 1500 வாங்கக் கூடாதுனு விஜய் சொல்லனும். அதுவும் நேர்மையற்ற செயல்தான். சரி செய்வதாக இருந்தால் எல்லாத்தையும் சரி செய்யனும். தலைவர்கள் வானத்தில் இருந்து குதிக்குறதில்லை. மக்களில் இருந்துதான் வராங்க” என்று அமீர் பேசியிருக்கிறார்