ஓடிக்கொண்டிருக்கும் ரயிலின் திறந்த கதவு அருகே இரண்டு நபர்கள் பயங்கரமாக மோதிக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கூட்ட நெரிசல் மிகுந்த அந்தப் பெட்டியில், சின்னதாக ஆரம்பித்த வாக்குவாதம் திடீரென கைகலப்பாக மாறியது. சுற்றியிருந்த பயணிகள் “வேண்டாம், விட்டுடுங்க” எனச் சொல்லியும் கேட்காமல், இருவரும் ஒருவரை ஒருவர் ஆக்ரோஷமாக எட்டி உதைத்துக் கொண்டனர். இதில் கொடுமை என்னவென்றால், சண்டையின் உச்சத்தில் ஒருவன் நிலைதடுமாறி ஓடும் ரயிலில் இருந்து வெளியே விழ, அடுத்த நொடியே ஆத்திரத்தில் இருந்த மற்றொருவனும் அவனுடன் சேர்ந்து கீழே குதித்துவிட்டான். நல்லவேளையாக ரயில் மெதுவாகச் சென்றதால் அவர்கள் உயிர் தப்பியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது, இல்லையென்றால் நிலைமை விபரீதமாகியிருக்கும்.
Kalesh in moving train,
Two men fight at door of the train coach and both of them fell from the train, lucky for them the Train was moving slowly and hopefully both escaped without severe injuries.
People who cannot control their anger / rage or people who suffer from "Hero… pic.twitter.com/608LR32Bsb
— Woke Eminent (@WokePandemic) February 2, 2026
இந்தக் காட்சியை அங்கிருந்த பயணி ஒருவர் தனது செல்போனில் படம்பிடித்து வெளியிட, “விட்டமின்-டி குறைபாடு தான் இப்படி பண்ண வைக்குது” என நெட்டிசன்கள் கிண்டலாகவும் அதேசமயம் எச்சரிக்கையாகவும் கமெண்ட் செய்து வருகின்றனர். “ஹீரோ காம்ப்ளக்ஸ்” மற்றும் கோபத்தைக் கட்டுப்படுத்தத் தெரியாத நபர்களால் பொது இடங்களில் மற்றவர்களுக்கும் எப்படி ஆபத்து ஏற்படுகிறது என்பதற்கு இது ஒரு கசப்பான உதாரணம். ரயில்வே தண்டவாளத்தில் விழுந்த அந்த இருவருக்கும் என்ன ஆனது என்ற விபரம் தெரியவில்லை என்றாலும், ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் நிரூபித்துள்ளது. ரயிலில் பயணம் செய்யும்போது கதவோரம் நிற்பதே ஆபத்து, இதில் சண்டை வேறு தேவையா எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
