சிறுவன் ஒருவன் உயிர்க்கும் ஆபத்தான பாம்புடன் விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில், குழந்தை ஒரு சிங்கிள் சீட்டர் சொஃபாவில் அமர்ந்திருக்க, அதன் தோளில் ஒரு பாம்பு கிடக்கிறது. தொடக்கத்தில், சிறுவன் அதை இரண்டு கைகளாலும் பிடித்து, தலைக்கு மேலே தூக்கி, பின்னர் சோஃபாவிற்கு அடிக்கிறான். பாம்பு அருகில் நெளிகையில், சிறுவன் அதன் தலைப்பகுதியை பிடித்து கவனமாக பார்க்கிறான். அப்போது பாம்பு தனது நாக்கை வெளியில் காட்டும் போது, சிறுவன் சிறிது பயந்து அதைசோஃபாவிலிருந்து தள்ள முயல்கிறான். இந்தக் காணொளி 12 மில்லியன் பார்வைகளை கடந்துள்ள நிலையில், பலரும் குழந்தையின் பாதுகாப்பு குறித்து ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்த வீடியோவை பகிர்ந்துள்ள விவேக் குமார் என்பவர், “vivek_choudhary_snake_saver” என்ற பயனர்பெயரில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதற்கு, “குழந்தையின் உயிரோடு விளையாடாதீர்கள், ஒரு லைக்கிற்காக இதுபோல் ஆபத்தான செயல்களை செய்ய வேண்டாம்” என்று பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், “ஒரு உண்மையான பாம்பு தவறுதலாக குழந்தையின் கையில் வந்தால், அதன் விளைவுகள் மோசமாக இருக்கும்” என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், விசாகப்பட்டினம் பென்துர்தி பகுதியில், நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாத ஏர் கண்டிஷனரில் பாம்பு மற்றும் அதன் குட்டிகள் இருப்பதை கண்ட ஒருவர் அதிர்ச்சி அடைந்த சம்பவமும் தற்போது பேசுபொருளாகியுள்ளது. இதனால், மக்கள் பாம்புகளின் அதிகரித்த தீங்குகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.