
சமூக ஊடகங்களில் தற்போது ஒரு ஆபத்தான ஸ்டண்ட் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதில், ஒரு இளைஞர் ரயில் பாதையின் நடுவில் படுத்துக்கொண்டு, ரயிலின் கீழ் அந்த ரயிலை கடக்கச் செய்கிறார். அந்த நபர் முதலில் தனது பையை ரயிலின் அடியில் இருந்து வெளியே தள்ளுகிறார்.
பிறகு தானும் மிகவும் அபாயமான முறையில், ஓடும் ரயிலின் அடியில் இருந்து மெதுவாக வெளியே வருகிறார். இந்த காணொளியை அருகில் இருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். @revengeseeker07 என்ற X கணக்கில் இது பகிரப்பட்டுள்ளது.
यमराज की बुआ का लड़का 💀 pic.twitter.com/jGc9c2nWYn
— Ankit (@revengeseeker07) June 18, 2025
இவ்வாறான வீடியோக்கள் சில நிமிட புகழுக்காக உயிரை ஆபத்தில் தள்ளும் முயற்சிகளாகவே பார்க்கப்படுகின்றன. இளைஞர்களிடம் தவறான புரிதலை உருவாக்கக்கூடிய இவை, கூடுதல் கட்டுப்பாடுகளுடன் கையாளப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். அரசு மற்றும் சமூக ஊடக நிறுவனங்கள் இத்தகைய வீடியோக்களை உடனடியாக தடுக்க வேண்டியது அவசியம் என்று பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.