சேலம் மாவட்டத்தில் உள்ள வெட்டுக்காடு பகுதியில் ராஜி(65) என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது மகன் ஜெயப்பிரகாஷ். மருமகள் புவனேஸ்வரி. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இவர்கள் திருச்செங்கோட்டில் எக்ஸ்பிரஸ் கொரியர் நடத்திக்கொண்டு அங்கேயே வாடகை வீட்டில் குடியிருந்தனர். கடந்த பத்து நாட்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் புவனேஸ்வரி சங்ககிரியில் இருக்கும் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

கடந்த 21ஆம் தேதி ரேஷன் பொருட்கள் வாங்குவதற்காக வெட்டுக்காடு பகுதியில் இருக்கும் மாமனார் மாமியார் வீட்டில் இரவு புவனேஸ்வரி தங்கினார். அப்போது நள்ளிரவு நேரம் தூங்கிக் கொண்டிருந்த புவனேஸ்வரியை அவரது மாமனார் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து புவனேஸ்வரி தனது தாய் மற்றும் கணவரிடம் கூறியுள்ளார். மேலும் காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ராஜியை கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.