பீகார் மாநிலம் கிஷன்கஞ்ச் என்ற மாவட்டத்தில் சமீபத்தில் வியப்பூட்டும் வகையில் பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். பிரசவத்தில் பிறந்த ஐந்து பெண் குழந்தைகளும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தாஹிரா பேகமுக்கு ஏற்கனவே வயிற்றில் 5 சிசுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்த மருத்துவர்கள் மிகுந்த கவனத்துடன் பிரசவம் பார்த்த நிலையில் தாயும் குழந்தைகளும் தற்போது நலமாக உள்ளனர்.