கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு 33 கோடி லாட்டரியில் பரிசு விழுந்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா இளைஞர் ஒருவருக்கு ஒரே நாளில் ₹33 கோடி பரிசு கிடைத்துள்ளது. துபாயில் பணியாற்றி வரும் ராஜீவ் அரிக்கத், தனது 5 மற்றும் 8 வயது குழந்தைகளின் பிறந்தநாள் எண்ணில் லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கி இருக்கிறார். குலுக்கலில் அவருக்கு 15 மில்லியன் திர்ஹாம் (₹33 கோடி) பரிசாக கிடைத்ததால், உற்சாகத்தில் துள்ளி குதித்த அவர் அந்தப் பணத்தை தனது நண்பர்கள் 19 பேருக்கு வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.