
சீனாவை சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவருக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. அதாவது லாட்டரியில் அவர் ரூ. 795 கோடி வென்றுள்ளார். இதுவே சீனாவில் ஒருவர் லாட்டரியில் வென்றுள்ள மிக உயர்ந்த தொகை ஆகும். அந்த இளைஞர் குய் மாகாணத்தில் சிறு தொழில் நடத்தி வந்த நிலையில் இம்மாதம் 7ஆம் தேதி அந்த பணத்தை பெற்றுக்கொண்டதாக தெரிகிறது. பணத்தை வென்ற நாளன்று தான் மகிழ்ச்சியில் தூங்கவில்லை என்று அவர் கூறிஉள்ளார்.