பீகார் மாநிலத்தில் இன்று அதிகாலை நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சிவசாகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பக்னாரி அருகே இரண்டாவது தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கண்டெய்னர் மீது கார் மோதியதில் ஏழு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் ஐந்து பேர் காயமடைந்த நிலையில் அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்துக்கு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் விபத்தில் காரின் முன் பக்கம் முழுவதும் அப்பளமாக நொறுங்கியது.