
தென்கொரியாவில் சியோலில் 1975 ஆம் ஆண்டு தொலைந்து தமது மகளை ஹான் டே-சூன் என்பவர் 44 ஆண்டுகளாக பேச போராட்டத்திற்கு பிறகு கண்டறிந்து மீண்டும் தனது மகளுடன் இணைந்துள்ளார். தாய் கடைக்கு சென்ற நேரத்தில் ஆறு வயது மகளை மர்ம நபர்கள் கடத்தி சென்று அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
கடந்த 2019-ஆம் ஆண்டு டிஎன்ஏ மூலம் பெற்றோரை கண்டறியும் முயற்சியில் இறங்கிய போது உண்மை அம்பலமானது. சிறு குழந்தையாக தொலைத்த மகள் வளர்ந்து வந்து நிற்பதை கண்டதும் அவரது தாய் ஹான்டே-சூன் மகளைக் கட்டிப் பிடித்து கண்ணீர் வடித்தார். இந்த காட்சி காண்போரை கண் கலங்க வைத்தது.