வங்கதேசத்தின் குல்னா பகுதியில், இரண்டு நாட்களுக்கு முன்பு ரிக்ஷா பயணி ஒருவரால் சுத்தியலால் தாக்கப்பட்ட ரிக்ஷா தொழிலாளி ரோனியின் நிலைமை தற்போது மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. தாக்குதல் நடத்தப்பட்டதில் இருந்து இதுவரை அவர் நினைவு திரும்பவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த பிப்ரவரி 4-ம் தேதி அன்று காலையில் சவாரிக்குச் சென்றபோது, ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்துச் சென்ற மர்ம நபர், ரோனியின் தலையில் சுத்தியலால் பலமுறை கொடூரமாகத் தாக்கிவிட்டு ரிக்ஷாவைத் திருடிச் சென்றுள்ளார்.
தற்போது டாக்கா மருத்துவக் கல்லூரியில் அவருக்குத் தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது, இருப்பினும் அவர் உயிருக்குப் போராடி வருகிறார். பாதிக்கப்பட்ட ரோனியின் மனைவி முக்தா கண்ணீர் மல்கக் கூறுகையில், “குடும்பத்தின் ஒரே வருமான ஆதாரமான ரிக்ஷாவை வெறும் ஒரு மாதத்திற்கு முன்புதான் 50,000 ரூபாய் கடன் வாங்கி வாங்கினோம். இப்போது ரிக்ஷாவும் போய்விட்டது, என் கணவரும் பேச முடியாத நிலையில் கிடக்கிறார்.
Attacked with a hammer 🥹
Just to steal the Cycle Rickshaw. How inhuman people have become….. hitting with hammer 🔨 in head from backside till he goes down. 😡 pic.twitter.com/arXfvuCqBj
— Oxomiya Jiyori 🇮🇳 (@SouleFacts) February 5, 2026
மருத்துவச் செலவுக்கும், குடும்பத்தை நடத்தவும் என்ன செய்வது என்றே தெரியவில்லை” எனத் தனது வேதனையைப் பகிர்ந்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து குல்னா மாநகர காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளைச் சேகரித்து வரும் போலீசார், இது ஒரு திட்டமிடப்பட்ட கொள்ளைச் சம்பவம் என்றும், குற்றவாளியைத் தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
