தமிழ் சினிமாவில் வெளியான சைத்தான் உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்தவர் நடிகை அருந்ததி நாயர். இவர் விபத்து ஒன்றில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் ஒரு மாதம் ஆகியும் அவருடைய உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என உறவினர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி அருந்ததி நாயர் விபத்தில் சிக்கிய நிலையில்  தற்போது ஐசியூவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு தினசரி 2 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது என்ற உறவினர்கள் கூறியுள்ளனர். மேலும் அருந்ததி நாயரின் மருத்துவ செலவுக்கு திரை துறையினர் உதவி செய்ய வேண்டும் என அவருடைய குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.