
நாடு முழுவதும் சைபர் கிரைம் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்கிறது. அதனை தடுக்கும் பொருட்டு அரசு பல முக்கிய நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மக்களை ஏமாற்ற விதவிதமான வழிகளில் பணத்தை பறிக்கின்றனர்.
பங்கு சந்தையில் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றுகின்றனர். எனவே பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு மத்திய அரசு ஃபோனில் காலர் டியூன் ஒன்றை அறிமுகப்படுத்தியது.
அதில் சைபர் கிரைம் குற்றவாளிகள் இடமிருந்து எச்சரிக்கையாக இருங்கள் என்று பேசுவது போல காலர் டியூன் போனில் ஒலித்துக் கொண்டே இருக்கும். ஒருவருக்கு போன் செய்தால் முதலில் அந்த காலர் டியூன் தான் ஒலிக்கும்.
அதன் பிறகு தான் ரிங் போகும். அவசர காலகட்டங்களில் இது தொந்தரவாக இருப்பதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். அதனை கருத்தில் கொண்டு விழிப்புணர்வு காலர் டியூன் இனிமேல் தினமும் இரண்டு முறை மட்டுமே ஒலிக்கும் என அரசு தெரிவித்துள்ளது.