மோடி அவர்கள் தமிழகத்தின் 40 தொகுதியிலும் பிரச்சாரம் செய்தாலும் ஒரு தொகுதியில் கூட பா.ஜ.க வெற்றி பெறாது என காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தேர்தலை மனதில் வைத்து பா.ஜ.க அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. தேர்தல் பத்திர ஊழலில் இருந்து மக்களின் கவனத்தை தவிர்க்க இப்போது இந்த சட்டத்தை அமல்படுத்தியுள்ளார்கள் என தெரிவித்துள்ளார்.