
டெலாஸ் நகரத்திலிருந்து பாஸ்டனுக்குச் செல்லவிருந்த விமானம், மதுபோதையில் இருந்த பெண் பயணி அலீசியா சண்டை செய்ததால் தாமதமானது. அந்த பெண் விமானத்தில் இருந்து இறங்க மறுத்ததோடு, நன்றாக பேசவோ, விழித்திருக்கவோ கூட முடியாத நிலைக்கு சென்றிருந்தார்.
தொடக்கத்தில், குறைவாக மதுவை குடித்ததாக கூறிய அலீசியா, பின்னர் ஆறு கண்ணாடி வைனும், ப்ரொசெக்கோ மற்றும் இரண்டு டெகிலாஉட்பட அதிக அளவில் மது அருந்தியதாக ஒப்புக்கொண்டார்.
Drunk Karen learns harsh lesson after forcing entire plane to disembark because of her entitled antics pic.twitter.com/Taq3DfOZo3
— Grifty (@TheGriftReport) June 14, 2025
அலீசியாவை வெளியேற்ற அதிகாரிகள் முயற்சித்தபோதும், “இல்லை, நான் கிளம்பமாட்டேன்” என்று உறுதியாக மறுத்தார். அதிகாரிகள் கடைசியாக மற்ற பயணிகளை விமானத்திலிருந்து இறக்க விட்டு, அலீசியாவை கைது செய்தனர்.
“நான் வீட்டுக்குப் போக முயற்சித்தேன், ஏன் என்னை தடுத்தீர்கள்?” என அவர் விமானத்தில் கதறிய காட்சிகள் வீடியோவில் தெளிவாக தெரிகின்றன. விமான நிலையத்தில் கூட அவர் ஆத்திரத்தில் சாக்கடையில் விழுந்து, போலீசாரிடம் “எனக்கு ஒரு சிகரெட் வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.
இந்த சம்பவம் தொடர்ந்து விமான நிலையத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் அவரை பொது இடத்தில் மது அருந்தியதற்கும், சட்டவிரோதமாக விமான நிலையத்தின் பாதுகாப்பு பகுதிக்கு நுழைந்ததற்கும் கைது செய்தனர்.