ஒடிசா முன்னாள் ஆளுநர் எம்எம் ராஜேந்திரன் உடலுக்கு காவல்துறை மரியாதை செலுத்த ஆணையிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரும், ஒடிசா மாநில முன்னாள் ஆளுநருமான எம்.எம் ராஜேந்திரனுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.  எம்.எம் ராஜேந்திரனின் சேவைகளை போற்றும் வகையில் காவல்துறை மரியாதையுடன் இறுதி நிகழ்வு நடைபெறும். உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்ற எம் எம் ராஜேந்திரன் மறைவு பேரிழப்பாகும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதனிடையே மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் சார்பில் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் மறைந்த தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரும் ஒடிசா மாநில முன்னாள் ஆளுநருமான திரு.எம்.எம். ராஜேந்திரன் அவர்களின் இல்லத்திற்கு சென்று, அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.