
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த பொன்பாடி என்ற பகுதியில் சோதனை சாவடி அமைந்துள்ளது. அங்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சாலை ஓரத்தில் கனரக லாரி ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது.
நேற்று அதிகாலை ஆந்திர மாநிலத்தில் இருந்து திருத்தணியை நோக்கி ஒரு டிப்பர் லாரி ஒன்று சென்றது. அப்போது பொன்பாடி சோதனைச் சாவடி அருகே லாரி சென்ற போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்றிருந்த கனரக லாரி மீது மோதியது.
இதனால் அந்த லாரியின் முன் பகுதி முழுவதும் சேதமடைந்தது. விபத்தை ஏற்படுத்திய டிப்பர் லாரி ஓட்டுநர் அருள்(40) இரண்டு லாரிகளின் இடையில் சிக்கிக்கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிப்பாடுகளில் சிக்கிக்கொண்ட அருளை 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகே மீட்டனர்.
பின்பு அருளை மீட்ட போலீச அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.