ஐடிஐ சான்று பெற்றவர்கள் பள்ளி வகுப்புக்கு இணையான சான்று பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, 8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ பயிற்சி பெற்றவர்கள் 10-ம் வகுப்பு தமிழ், ஆங்கில மொழி பாடங்களில் தேர்ச்சி பெற்றால், 10-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெறலாம். இதேபோல் +1, +2 வகுப்புகளில் தமிழ், ஆங்கில பாடங்களில் தேர்ச்சி பெற்றால் 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெறலாம்.

தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழை பெறுவதற்காக விண்ணப்ப படிவம் மற்றும் முழு விவரங்கள் கொண்ட வழிகாட்டுதல்களை இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதை பின்பற்றி மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் சென்று அல்லது தபால் மூலமாகவோ பிப்ரவரி 28ஆம் தேதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.