
ரஷ்யா நாட்டைச் சேர்ந்த டேனெலியா கசனோவா, எல்லைகளை மீறி சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். “நீங்கள் ஒரு டேட்டுக்கு தாமதமாக வரும்போது” என்ற தலைப்புடன், ஒரு வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில், ஒரு துண்டை மட்டும் போர்த்தியவாறு சாலையில் நடந்து வந்த டேனெலியா, சாலையின் நடுவே நின்று தலைமுடியில் ஷாம்பு தடவி கழுவும் அதிர்ச்சி காட்சி இடம்பெறுகிறது.
View this post on Instagram
இது மட்டுமல்லாமல், அருகில் சென்ற பெண்களிடம் தண்ணீர் கேட்டு தலை கழுவுகிறார். பின்னர், ஒருவரிடம் கண்ணாடி வாங்கி ஒப்பனை செய்கிறார். இன்னொருவரிடம் டியோடரண்ட் கேட்டு தெளிக்கிறாராம்.
இவரது செயல் சாலையில் சென்றவர்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. சிலர் தங்களது மொபைலில் இந்த வீடியோவை பதிவு செய்யத் தொடங்கினர். எல்லாவற்றிற்கும் மேலாக, வீடியோவின் முடிவில் டேனெலியா அந்த துண்டை எறிந்து விடுவதுதான் நெட்டிசன்களை அதிர்ச்சி அடைய வைத்தது.
இந்த வீடியோ தற்போது இன்ஸ்டாகிராமில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. சிலர், “இந்த தைரியம் பாராட்டத்தக்கது” என்றும், “அவரது தன்னம்பிக்கை அபாரமாக இருக்கிறது” என்றும் பாராட்டுகின்றனர்.
மற்றொருபக்கம், “இது சுதந்திரம், நவீனத்துவம் என்ற பெயரில் செய்யப்படும் சீரழிவான செயல்” என கடுமையாக விமர்சிக்கின்றனர். சமூகத்தில் கவனத்தை ஈர்க்க சிலர் எதையும் செய்யத் தயார் எனும் பேச்சுக்கே இந்த வீடியோ மிகச் சிறந்த எடுத்துக்காட்டு என நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.