சிவகங்கை மாவட்டம் செம்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் புகலேஸ்வரன். இவரது மனைவி நாகஜோதி. தற்போது புகலேஸ்வரன் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருந்துள்ளனர்.

இதில் இரண்டாவது மகன் ராகுல் கடந்த ஆண்டு தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து முடித்தார். இவர் மதுரையில் இருக்கும் தனியார் பயிற்சி நிலையத்தில் கடந்த ஒரு வருடமாக நீட் தேர்வுக்கு படித்து வந்தார். நேற்று நீட் தேர்வு முடிவுகள் வெளியானது.

அதற்கு முன்பே ராகுல் கரிசல்குளம் கிராமத்தில் இருக்கும் தனது பெரியப்பாவில் வீட்டிற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.