கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவின் தலைநகரில் செயல்பட்டு வந்த எரிவாயு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தால் அருகில் இருந்த குடியிருப்பு பகுதிகளுக்கும் நெருப்பு பரவியது.

இந்த தீ விபத்தினால் 300க்கும் அதிகமானோர் காயமடைந்த நிலையில் ஒரு குழந்தை உட்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

எரிவாயு சிலிண்டர்களை ஏற்றி சென்ற லாரி வெடித்தது தான் தீ விபத்துக்கான உண்மை காரணம் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.