
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை எம்எல்ஏ பதிவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தற்போது சபாநாயகரிடம் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மிலானி என்பவர் புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக சபாநாயகரிடம் மிலானி ஒரு புகார் மனுவினை கொடுத்துள்ளார்.
அந்த மனுவில் போடிநாயக்கனூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருக்கும் ஓ பன்னீர்செல்வம் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் எம்பி வேட்பாளராக சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்டார்.
எனவே அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் நிலையில் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை எதிர்த்து எம்பி தேர்தலில் போட்டியிட்டதால் அரசியலமைப்பு சட்டத்தின் பத்தாவது அட்டவணை பிரிவு 2/1 அடிப்படையில் கீழ் அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த மனு தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை செய்து சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று சட்டப்பேரவை செயலகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த மனு தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுவதால் இது ஓ. பன்னீர்செல்வத்திற்கு புதிய சிக்கலாக அமையக்கூடும் என்று கூறப்படுகிறது.