
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மனைவி சின்ன பாப்பா. இந்த தம்பதியினருக்கு ரம்யா(21) என்ற மகள் இருந்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ரம்யா பொன்னுமணி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை.
இந்த நிலையில் சரியாக வீட்டு வேலை செய்யாது ரம்யாவை பொன்னுசாமி கண்டித்ததாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட தகராறில் மன உளைச்சலில் இருந்த ரம்யா விஷம் கொடுத்து தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ரம்யாவை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ரம்யா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ரம்யாவின் தாய் சின்ன பாப்பா தனது மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.