மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் இந்தூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம், போலீசாரை கூட ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பலாசியா பகுதியில் வசிக்கும் தொழிலதிபர் ராகேஷ் அகர்வாலின் ரேஞ்ச் ரோவர் சொகுசு கார் திருடப்பட்டது. அவரின் வீட்டில் ஓட்டுநராக வேலை செய்த துர்கேஷ் ராஜ்புத், காரை சுத்தம் செய்ய சாவியை கேட்டார். நம்பிக்கையுடன் சாவியை கொடுத்த உரிமையாளர், பின்னர் ஓட்டுநரை காணவில்லை என்பதும், அவரின் போன் மூலம்தொடர்பு கொண்டார். ஆனால் அவர்  பதில்ல அளிவில்லை. இதனால் சந்தேகம் ஏற்பட்டு கார் திருடப்பட்டது என்று உறுதியாக உணர்ந்த அவர், உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் காரில் பொருத்தப்பட்ட ஜிபிஎஸ் மூலம் 6 மணி நேரத்திற்குள் அதனை கண்டுபிடித்து மீட்டனர்.

கைது செய்யப்பட்ட துர்கேஷ் ராஜ்புத் விசாரணையில், தன் மீது கோபமாக இருந்த மனைவியை சமாதானப்படுத்தவே காரை திருடியதாக தெரிவித்துள்ளார். இது காவல்துறையினருக்கு ஆச்சரியத்தையும் நகைச்சுவையையும் ஏற்படுத்தியுள்ளது. மிகுந்த நம்பிக்கையுடன் வேலை வழங்கிய முதலாளியின் காரை, குடும்ப பிரச்சனையை சமாளிக்க திருடியது, இந்த சம்பவத்தை மற்றொரு கோணத்தில் பார்க்க தூண்டும் விதமாக உள்ளது. சமூக வலைதளங்களில் இந்த சம்பவம் “கணவன்-மனைவி பிரச்சனைகளுக்கு விலையுயர்ந்த தீர்வு!” என கலாய்ப்புக்குரியதாக பரவி வருகிறது. தற்போது, போலீசார் துர்கேஷுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.