
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிரஞ்சீவி. இவரை ரசிகர்கள் மெகா ஸ்டார் என்று அன்போடு அழைக்கிறார்கள். இவருடைய மகன் நடிகர் ராம்சரண். இவர் உபாசானா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் 10 வருடங்களுக்கு பிறகு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் பிரம்மானந்தம் என்ற திரைப்பட வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகர் சிரஞ்சீவி தற்போது பெண் குழந்தைகள் பற்றி பேசியது சர்ச்சையாக மாறியுள்ளது. இது பற்றி அவர் கூறியதாவது, என் மகன் ராம் சரணுக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்து விடுமோ என்று பயமாக இருக்கிறது.
நான் வீட்டில் இருக்கும் போது என்னை சுற்றி பேத்திகள் இருப்பது போல் உணரவில்லை ஏதோ லேடிஸ் ஹாஸ்டலில் இருப்பது போல் இருக்கிறது. என் பரம்பரை பெருமையை முன்னெடுத்து வழி நடத்திச் செல்ல ஒரு ஆண் வாரிசு வேண்டும். நான் இது பற்றி என் மகனிடம் கூறினால் அவருக்கு அவருடைய மகள் தான் எல்லாம். குடும்பத்தின் மரபை தொடரும் வகையில் இந்த முறையாவது என் மகனுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் நடிகர் சிரஞ்சீவிக்கு தற்போது கண்டனங்கள் குவிந்து வருகிறது.
Chiranjeevi is afraid Ram Charan will have another daughter and the legacy of the family will not be carried forward.
The rot runs so deep, it is not even funny.
Proud to be the mother of a girl, daughters are beautiful, daughters are pure love and they will carry your legacy… pic.twitter.com/Ep5GuGwRI5— Sneha Mordani (@snehamordani) February 12, 2025