11-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மதுரை வேலம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பில் மதுரை வேலம்மாள் குளோபல் பள்ளியின் உசைன் போல்ட் மைதானத்தில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 10,000 மேற்பட்ட மாணவ மாணவிகள் வந்தனர். இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, வேலம்மாள் கல்வி அறக்கட்டளை சேர்மன் எம்.வி முத்துராமலிங்கம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய நடிகை நமீதா கூறியதாவது 2007 ஆம் ஆண்டு பாலிவுட் நடிகை கரீனா கபூர் யோகா மூலம் உடலை கட்டுப்பாட்டோடு வைத்த பிறகுதான் எங்களுக்கு யோகா பற்றி தெரிந்தது. கடந்த பத்து ஆண்டுகளாக யோகா பிரபலம் ஆகிவிட்டது. ஆங்கிலம் தெரிந்திருப்பது நல்லது. தான் அதற்கு முன்பு தாய் மொழியை தெரிந்திருப்பது முக்கியம்.

என் குழந்தைகளுக்கு தமிழ், தெலுங்கு, குஜராத்தி தெரியும். ஏனென்றால் அது அவர்களது தாய்மொழி. நான் என் குழந்தைகளிடம் ஆங்கிலத்தில் பேச மாட்டேன். என் குழந்தைகளுக்கு ஸ்பைடர் மேன், சூப்பர் மேன் பற்றி தெரியாது. ஆனால் ஜெய் அனுமான் பற்றி தெரியும். என் குழந்தைகளுக்கு அனுமன் என்றால் இஷ்டம். இதை நான் பெருமையாக தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.