திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் அருகே வசிக்கும் 20 வயதுடைய இளம்பெண் செங்கல்பட்டில் இருக்கும் தனியார் செல்போன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த இளம்பெண் ஒரு வாலிபரை காதலிக்கிறார். கடந்த வாரம் அண்ணன் திருமணத்தில் பங்கேற்பதற்காக இளம்பெண் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது இளம் பெண்ணின் காதலன் அவருக்கு வாசனை திரவியத்தை பரிசாக கொடுத்தார். இதனை அறிந்த இளம் பெண்ணின் பெற்றோர் அவரை கண்டித்தனர்.

இதனால் மன உளைச்சலில் இருந்த இளம்பெண் தனது காதலனின் நண்பனான மூர்த்தியின் வீட்டிற்கு சென்று காதலனின் வீட்டில் கொண்டு விடுமாறு கேட்டுள்ளார். அதனை ஏற்றுக் மூர்த்தி இளம்பெண்ணை மோட்டார் சைக்கிளில் அவரது காதலன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். ஆனால் போகும் வழியிலேயே வேறு திசையில் வாகனத்தை திருப்பி காட்டுப் பகுதியில் வைத்து இளம் பெண்ணை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இந்த சம்பவத்தை வெளியே சொன்னால் உனது குடும்பத்தினரை கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாக தெரிகிறது.

இதனால் இளம்பெண் யாரிடமும் அது பற்றி கூறாமல் இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மூர்த்தி குடிபோதையில் மூர்த்தி செல்போன் மூலம் நண்பனை தொடர்பு கொண்டு அவரது காதலியை கற்பழித்தது பற்றி உளறிவிட்டார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த காதலன் இளம் பெண்ணின் பெற்றோருக்கு அதை தெரியப்படுத்தியுள்ளார். நேற்று பாதிக்கப்பட்ட இளம்பெண் தனது பெற்றோருடன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மூர்த்தியை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.