பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில், பாலியல் வன்கொடுமையை எதிர்த்து ஒரு பெண் எடுத்த முடிவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பரு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தில், 30 வயதுடைய பெண்ணிடம் கடன் வசூலிக்க வந்த ஒரு இளைஞர், வலுக்கட்டாயமாக பாலியல்  உறவில் ஈடுபட முயன்றதாக கூறப்படுகிறது. இதனை எதிர்த்த பெண், அரிவாளைப் பயன்படுத்தி அந்த இளைஞரின் அந்தரங்க உறுப்பை வெட்டினார்.

இதில் காயமடைந்த இளைஞர் இரத்த வெள்ளத்தில் துடி துடித்து அலறியுள்ளார். அதனைக் கண்ட கிராம மக்கள் உடனடியாக அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். முதன்மை சிகிச்சைக்குப் பிறகு, அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால், அவரை ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்த இளைஞர் கடனை வசூலிக்க சென்ற இடத்தில் அந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். கோபத்தில் அந்த பெண் அறிவாளை எடுத்து அவரை அந்தரங்க உறுப்பை வெட்டினார். மேலும் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் எதுவும் கொடுக்கப்படவில்லை என்றாலும் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.