தமிழ் சினிமாவின் ஆக்சன் ஹீரோவாக திகழ்ந்த சரத்குமார் சமீபகாலமாக நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் வகையில் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகின்றார். அவ்வகையில் அவர் நடித்த காஞ்சனா 2, சென்னையில் ஒரு நாள், வாரிசு, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட திரைப்படங்கள் அவரின் கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இந்நிலையில் இயக்குனர் மணிரத்தினம் தன்னிடம் பொன்னியின் செல்வன் 2 படப்பிடிப்பின் போது கேட்ட அந்த ஒரு கேள்வி மிகவும் வருத்தம் அடைய வைத்ததாக கூறியுள்ளார்.

அதாவது பொன்னியின் செல்வன் படபிடிப்பின் போது இயக்குனர் மணிரத்தினம் சரத்குமாரை பார்த்து உங்களுக்கு ரொமான்ஸ் வருமா என கேட்டுள்ளார். இதனை நேற்று சென்னையில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் ஆடியோ வெளியீட்டு விழாவில் சரத்குமார் பகிர்ந்தார். இரண்டு முறை காதலித்து திருமணம் செய்து கொண்ட என்னை பார்த்து மணிரத்தினம் அப்படி கேட்டதும் மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியது என கூறியுள்ளார்.