டெல்லியின் கிழக்கு பகுதியான கபாசேராவை சேர்ந்த 14 வயது சிறுவன் தனது பெற்றோர் வேலைக்கு சென்று இருந்த சமயம் தனது வீட்டிற்கு அருகே உள்ள 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதை அறிந்து கொண்ட சிறுமியின் பெற்றோர் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்க விரைந்து வந்த போலீசார் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றதோடு சிறுமியிடமும் சிறுமியின் பெற்றோரிடமும் வாக்குமூலம் வாங்கிக் கொண்டனர். சிறுவனின் மீது POCSO சட்டத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது.