மதுரை மாவட்டம் தல்லால்குளம் விசாலாட்சிபுரம் பகுதியில் பிரியா (39) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய கணவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்ட நிலையில் தன்னுடைய 2 மகன்கள் மற்றும் ஒரு மகளுடன் அவர் தனியாக வசித்து வருகிறார். இதில் அவரது மகள் அர்ச்சனாவுக்கு 14 வயதாகும் நிலையில் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் சிறுமியுடன் படிக்கும் அவரது தோழி ஒருவர் மதுரையில் உள்ள வேறு ஒரு தனியார் பள்ளிக்கு மாறியுள்ளார்.

இதனால் அர்ச்சனாவும் தன்னுடைய தோழி படிக்கும் அதே பள்ளியில் சேர்த்து விடுமாறு தன் தாயிடம் கூறிய நிலையில் அதற்கு பிரியா மறுப்பு தெரிவித்தார். இதன் காரணமாக சிறுமி வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.