கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் சிவசூர்யா(19). இவர் சில நாட்களாக அப்பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை செய்து வந்துள்ளார். ராணிப்பேட்டை பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் 11-ம் வகுப்பு முடித்துவிட்டு 12-ம் வகுப்பு செல்ல உள்ளார். இவர் சிவசூர்யா என்ற வாலிபர் கஞ்சா விற்பனை செய்து வருவதாக  போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதனால் போலீசார் சிவ சூர்யாவை கைது செய்தனர். மாணவன் தன்னை போட்டுக் கொடுத்தால் சிவசூரியாவிற்கு மாணவன் மீது கோபம் ஏற்பட்டது. இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சூர்யா வெளியே வந்த பிறகு முன் விரோதத்தை மனதில் வைத்துக் கொண்டு மாணவனை பழி தீர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தார்.

இந்த நிலையில் இந்திரா நகர் பகுதியில் மாணவன் சென்றுகொண்டிருந்த போது சூர்யா அவரது நண்பர் லிபினை (23)அழைத்துக் கொண்டு மாணவனை வழிமறித்து ‌ தகராறு செய்துள்ளார்‌. இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதால் கோபமடைந்த சூர்யா அங்கு கிடந்த மதுபாட்டிலை எடுத்து மாணவனை பலமாக தாக்கினார்.

இதனால் மாணவன் மயங்கி கீழே விழுந்ததும் சூர்யா அங்கிருந்து தப்பி சென்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் மாணவனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து சூர்யாவை கைது செய்தனர். தலைமறைவான சூர்யாவின் நண்பரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.