மூணாறில் இருக்கும் சாதாரண ஹோட்டல்களிலும் உணவுகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் சுற்றுலா பயணிகள் சிரமப்படுகின்றனர். இந்த நிலையில் கொச்சி தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையின் புறவழி சாலை பாலம் அருகே ஒரு சாதாரண ஹோட்டல் உள்ளது. அங்கு பூரி செட் ரூ.120, இட்லி 70 ரூபாய், காபி 30 ரூபாய், உப்புமா 80 ரூபாய், சாப்பாடு 250 ரூபாய் என கட்டணம் வசூலிக்கின்றனர். அந்த ஹோட்டல் பில் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.

அது மட்டும் இல்லாமல் சீசன் நேரங்களில் சாதாரண தங்கும் அறைக்கு ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூல் செய்கின்றனர். சொல்லப்போனால் சீசனில் மட்டும்தான் அதிக வருமானம் கிடைக்கும். இதனால் ஹோட்டல் பேக்கரிகளை அவற்றின் உரிமையாளர்கள் நாள் வாடகைக்கு விடுகின்றனர். சீசன் இல்லா நேரங்களில் நஷ்டத்தை ஈடுகட்ட விலையை உயர்த்தி விடுகின்றனர். இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.